தன் ஒற்றை காலை மடிக்கி வைத்து மற்றொரு கையை முட்டியில் வைத்து குனிந்து அவள் அருகே பார்த்திருந்தவனுக்கு , மிரண்ட அவளது பார்வையும்.. அழுகையும்.. தன் மனதை இளக வைக்கவே ... அதை விரும்பாதவனாய் முகத்தில் கடுமையை ஏற்றி உடனே ,
" இப்ப எதுக்காக அழுது இரிடேட் பண்ணீட்டு இருக்க.. போ..போய் சீக்கிரம் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணு... ", என்று கத்தி வெளியேறிவிட்டான் . பேந்த பேந்த என்று விழித்தபடியே வேகமாக எழுந்தவளுக்கு , ஆடை எங்கே..? என்று கேட்கும் தைரியமும் இருந்திருக்கவில்லை .
' இவுக.. எங்க மித்ரன் ஸாரே இல்ல..' மனதிற்குள் வெதும்பியவளாய் , படுக்கையில் இருந்த பையை கையில் எடுத்து உடுத்தத் தொடங்கியவள் . அவனை விழிகளால் துலாவ.. கால் மேல் கால் போட்டு.. கம்பீரமாக முன் அறையில் உட்காந்திருந்தான் .
வேங்கையின் குகைக்குள் தானாய் வந்து மாட்டிய ஆடு போல்.. உயிரை கையில் பிடித்து , அவன் முன் சென்று நிற்க.. வா.. என்று அருகில் இருக்கும் மேஜையை காட்டினான் . அங்கே ஒரு பெண்ணும் இருக்க.. அமைதியாக அவன் காட்டிய இடத்தில் தலை நிமிராமல் அமர்ந்திருந்தவளின் முன் சுட சுட உணவு பரிமாறப்பட்டது . சாதம் , குழம்பு கூட்டு பொறியல் என்று வகைவகையாக தட்டில் நிறைந்திருக்க.. அசைவமும் இடம் பெற்றிருந்தது .
அவனும் அசைவம் சாப்பிடுகிறாயா..? என்று கேட்கவில்லை அவளும் எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் பசித்திருப்பவளுக்கு உணவின் வாசனையையும் அதிக தூண்டுதலாக இருக்கவே... அவசர அவசரமாக விழுங்க தொடங்கிவிட்டாள் . அருகில் இருக்கும் பெண்ணிடம் கண்களால் கட்டளையிட்டு காலியாகும் பதார்த்தங்களை அவளது தட்டில் நிரப்பிக் கொண்டிருந்தான் .
பசியின் அளவு குறைந்து வயிறு நிறைந்த பிறகே , அவன் பற்றிய ஞாபகமே மேல் எழுந்தது . அதன் பிறகே , தயக்கமாக அவன் முகம் பார்க்க.. அவனோ இதுவரை அவள் செய்த செயலை , அவன் செய்து கொண்டிருந்தான் . அதாவது அவளை கண்டுக் கொள்ளாமல் , சாப்பிடுவதில் கவனமாக இருந்தான் .
YOU ARE READING
வா.. வா... என் அன்பே...
Romanceகாதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளா...
அன்பே - 7
Start from the beginning