அவளுக்கு சந்தேகம் வந்து ராதாவிடம் போய் விஷயத்தை சொன்னாள்.. அவள் அதிர்ந்து போய் சௌமியின் கதவை தட்ட தட்ட அவள் திறக்கவில்லை... இப்போத் திறக்குரியா இல்ல உடச்சுட்டு உள்ள வரவா??? என்று ராதா கத்தவும் கதவை திறந்தாள் சௌமி..
"ஏண்டி தனியா பேசிட்டு இருந்தியா?" என்று கேட்கவும் மௌனம் மட்டுமே பதிலாக கிடைக்க ராதா யோசித்தவளாக இது சரிப்பட்டு வராது.. நீ கொஞ்சம் வெளி உலகத்தைப் பார்த்தே ஆகணும் நான் கவிதாக் கிட்டப் பேசிக்கேறுன்னு சொல்லிட்டு கவிதாவிடாம் போன் பண்ணி விஷயத்தை சொல்லி இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளாஸ் அனுப்பலாம் என்று முடிவெடுத்து அங்கே அனுப்பி வைத்தார்கள்..
அது சாயந்தரம் 4-6 மணிக்கு மட்டும் தான் என்பதால் அந்த அறையிலேயே மூழ்கி போய் கிடந்தாள்.. இதை கவனித்த ராதா கவிதாவிடாம் பேசிவிட்டு சௌமி Beauty parlour கு அனுப்பி ட்ரைனிங் எடுக்க வைத்தாள்..
நாள் முழுதும் இப்படியே பிஸியாக கழிய வருவதற்கும் வந்து தூங்குவதற்கும் சரியாக இருந்தது.. பழைய சௌமியாக கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருந்தாள்..
ஒன்றரை வருடம் கழித்து சௌமிக்கு சிவா கால் பண்ணினான்... அவள் எடுத்துப் பேச "என்ன திடீர்னு??" என்று சௌமி கேட்க, " அக்ரீமெண்டை நியாபாகப்படுத்ததான் போட்டேன்" என்று கூறி விட்டுப் போனை வைத்து விட்டான்..
அவன் போனதிலிருந்து அப்பொப்போ ராதாவுக்கு போன் பண்ணி சௌமியைப் பற்றி விசாரித்து கொள்வான் இது சௌமிக்கு தெரியாது ..
Beauty parlour-ல் பழகிய தோழிகளில் ஒருத்தி நான் ஏர்டெல் கம்பெனிக்கு வேலைக்கு போக போறேன் என்று கூற அதற்குண்டான இன்டெர்வியூ நாளை நடக்கவிருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தாள்.. சௌமியும் வேலைக்கு போகலாம் என்று முடிவெடுத்தவளாக அதைப் பற்றி விசாரித்து விட்டு தானும் அதில் கலந்துகொண்டு வெற்றியும் பெற்றாள்... வேலையும் கிடைத்தது...
தொலைந்து போன பொழுதுகளை எல்லாம் மீட்டெடுத்தாள்..
YOU ARE READING
என்னவன் 😍💕 (Completed)
Poetryஎன் முதல் முயற்சி.. காதல் கதை..ஒரு உண்மை சம்பவத்தின் தழுவல்..உங்க ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் ..😍😍🙌
என்னவன்36😍💕
Start from the beginning